Friday, July 31, 2009

சராசரியின் கல்யாணம் முடிந்து நூறு நாள்! Part 1.

கேக்கறதுக்கு நன்னா இருக்கு இல்லையா! ஆனா முதல் நாளிலிருந்து நூறாவது நாளுக்குள் முதல் வசந்தமும், ஜல்லிக்கட்டும் நடந்து அமைதிப்படையும் வந்து நூறாவது நாளை தொடும் பொழுது, ஹா! மிகப் பெரிய வெற்றிதான்!

சரி! நமது சராசரியின் கல்யாணத்திற்கு பிறகு முதல் நாள், நான் சொல்றேன் கேளுங்கோ! மிக சத்தியமாய் கிறுக்கனாய் அடித்து விடும். முதல் இரவு முடிந்தோனையே ஒரு அசட்டுக்களை சராசரியின் முகத்தில் ஒட்டிக்கொண்டு விடும். மறுநாள் காலை கண்ணாடியை பார்த்தால் நம் சராசரிக்கே ஒரு நிமிஷம் தோனிவிடும் ! இது என்ன அசட்டுக்களை என்று.

மறுநாள் காலை மெதுவாக பேச்சு கொடுப்பாள் அம்மா! டேய் இன்னிக்கு அத்திம்பேர் ஆத்துக்கு போகணும் நீ! அங்க விருந்து சாப்பாடு இருக்கு! கிளம்பறப்ப மறக்காம நமஸ்காரம் பண்ணிடு! அபிவாதயே சொல்ல மறந்திடாத! அப்படியே அங்கேயிருந்து அத்திம்பேர் அப்பா ஆத்துக்கு போய் ஒரு நமஸ்காரம் பண்ணிடு! உடனே நம்ம சராசரி சரிம்மா பண்ணிடறேன்! இப்படி சொன்னால் போதும் சராசரியின் ஆத்துக்காரி ஒரு பார்வை பார்ப்பா பாருங்கோ, 100km ஓடின bike silencer heatta விட சூடு இருக்கும் அவ பார்வையில.

அத்திம்பேர் ஆத்துக்கு போயாச்சு! வாடா! புது மாபிள்ளை! எப்படிடா இருக்க! நம்ம சராசரியின் மூஞ்சிய பார்த்தோனையே தெரியும் பயலுக்கு சவக்களை வந்தாச்சுன்னு!
இதுல ஒரு அல்ப சந்தோஷம் அவருக்கு! ம்ம் நம்ம ஜோதில ஒருத்தன் புதுசா கலந்துட்டான்னு! அக்கா சராசரியோட ஆத்துக்காரிய கிச்சனுக்குள்ள தள்ளிண்டு போயிட்டு, டேய் இவள எதாவது இம்சை பன்றியாடா? ஒன்னோட வால சுருட்டி வச்சுன்ன்டு இரு புரியறதா? இதுல சராசரியின் ஆத்துக்காரிக்கு ஒரு சந்தோஷம், ஒரு செட்டு சேர்த்தாச்சுன்னு. அப்ப அவ மூஞ்சில ஒரு அசட்டுக்கர்வம் தெரியும். நான் சொல்றேன் அந்த expressiona எந்த artistum தர முடியாது. ஒரு வழியாக விருந்து முடிஞ்சு பாலும் பழமும் கொடுத்து விருந்த வாந்தி எடுக்க வைக்கிற கொடுமையும் நடக்கும். இதுல யார் வாந்தி எடுத்தாலும் கஷ்டம் தான்.

பொண்ணு எடுத்தா, டேய்! எப்படிடா? ரெண்டு நாள் தான் ஆச்சு. அதுக்குள்ளயா! கில்லாடிடா நீ! ன்னு கிண்டல் பண்ணுவா! அதுவே நம்ம சராசரி எடுத்தா, என்னடா நீ போய் வாந்தி எடுக்கிற அவள்ன்னா எடுக்கணும், இங்க என்ன தலைகீழா நடக்கிரதுன்னும் கிண்டல் பண்ணுவா.
sirukku 10 நாள் போனதே தெரியாது. 11 ஆவது நாள் காலை officukku போகனும்ங்க்ரதே நம்மாளுக்கு வேப்பங்காயா இருக்கும். பயங்கர மூட் outla இருப்பார்.
நம்ம சராசரியின் பொண்டாட்டி ஏன்னா! ம்ம் ஏன்னா! ம்ம்ம்! ஏன்னா! என்ன்ன! first சண்டை! நாளைக்கு போகனும்மா! ஆமா! ஆமா! ஆமா! அதுக்கு என் இப்படி கடுப்படிக்கரேள்! அடடா! என்ன என் தூங்க விடமட்டேன்கிற? சரி! தூங்குங்கோ! நன்னா தூங்குங்கோ!

part 1 இதோட முடிஞ்சது! part 2 வில் சந்திப்போம்!
அன்புடன்
வினோதமானவன்.

No comments:

Post a Comment