Friday, December 18, 2009

எனக்கு மட்டும் ஏன் இப்படி?

ரொம்ப நாளாகவே எனக்கு இந்த தலைப்பில் எழுத வேண்டும் என ஆசை. இன்று தான் முயற்சி செய்கிறேன்.
எனக்கு மட்டும் ஏன் இப்படி? அநேகமாக நாம் எல்லோரும் இதை ஒரு தடவையாவது சொல்லியிருப்போம். இப்போது பார்ப்போமே! நமது நாயகன் பஞ்சு(கற்பனை பெயர்) என்ன சொல்ற்ரான்னு.

ஏண்ணா! உங்க ராசி மீனம் தானே! என்னடி கல்யாணம் ஆகி மூணு வருஷம் கழிச்சு இப்ப கேக்கற! கேட்டா சொல்ல வேண்டியது தான! அத விட்டுட்டு மூணு வருஷம் முப்பது வருஷம்னு டயலாக் அடிக்கறேல். நம்ம பஞ்சுவோட மனைவி கல்யாணம் ஆனா புதுசுல எப்படி இருந்தாலோ அதுக்கு அப்படியே உல்டா. இப்ப எல்லாம் பஞ்ச் டயலாக் இல்லாம பேசறதே இல்ல.

ஆமா! மீனம் தான்! என்ன விஷயம்! உங்க ராசிக்கு என்ன போட்டிருக்கான்னு பாக்கறேன்!.. அதுல என்னடி பாக்கற! என்ன கேளு நான் சொல்றேன்.
நம்மளோட மனைவி(ஜானுன்னு வச்சுப்போமே) ரொம்ப தெனாவெட்டா என்ன போட்டிருக்கான்? இன்று சக ஊழியரின் விடுப்பால் அதிக ப்ணி சுமையை சந்திக்கலாம்னு போட்டிருப்பான்..
ஜானு ஆச்சரியமாக எப்படின்னா? கரெக்ட். ஒன்னுமில்லடி எனக்கு எப்பவுமே இப்படிதான் போட்டிருப்பான்.

அன்றைக்கு வேலை சுமூகமாக முடிஞ்சு விட்டது! அப்பாடி இன்னிக்கி சீக்கிரம் ஆத்துக்கு சீக்கிரம் போய்டலாம் ஜானு அவாத்துக்கு போயிருக்கா! சீக்கிரம் போயிடோம்னா, நன்னா படம் பார்த்துட்டு, புக் படிச்சிட்டு., கம்பூட்டர்ல புது ப்ரென்ட் நந்திதா வருவா! 7 மணிக்கு ! அவளோட கொஞ்ச (கொஞ்சல்(ஜொள்ளோட) நேரம் சாட்டிங் பண்ணலாம், மெலடி சாங் கேட்டுண்டே படிக்கலான்னு மனசுக்குள் மத்தளம் கொட்டியபடி நைசாக பேக எடுத்துண்டு வந்தாச்சு.
பஸ் ஸ்டாப்ல பஸ்சுக்கு வைட்டிங்.
என்னிக்குமே அந்த நேரத்திற்கு வர பஸ் அன்னிக்கும் வந்தது அப்படியே நிக்காமல் சென்றது!
அரைமணி நேரம் கழித்து ஒரு பஸ் வந்தது. நின்னது ஆனால் பஞ்சுவிற்கு தான் நிக்க முடியவில்லை அப்படி ஒரு கூட்டம்.

பஞ்சுவிற்கு தந்து கனவுகள் கொஞ்சம் கொஞ்சமாக கரைவதை pola ஒரு தோற்றம் மனசுக்குள். அடுத்த அரைமணிநேரம் கழிச்சு வந்த பஸ்சில் ஏறி ஒரு பத்தடி இருக்கும் பஸ் நின்னு போச்சு ஒரு அசகாய குலுங்கலுடன்..என்னவோ பஸ்ஸுகே பஞ்சுவை ஏற்றியது பிடிக்காமல் போனது போல். ஒரு வழியாக பஸ்ஸை இறங்கி தள்ளி ஏறி வீட்டிற்க்கு வந்தால் மணி எட்டரை .குளித்துவிட்டு இருந்த சாதத்தை போட்டு மோரை விட்டு கரைத்து குடித்துவிட்டு
அட் லீஸ்ட் t.v பாப்போம் என்று ஆன் செய்தோன ஆன் செஞ்சோமா இல்ல ஆப் செஞ்சோமாங்கற மாதிரி t.v ஆப் ஆனது என்னடான்னு பார்த்தால் கரண்ட் கட்.
மனதிற்குள் மெலடி சாங் , புக், சாட்டிங் எல்லாம் சௌபாக்யா வெட் கிரைண்டரில் அரைத்த மாவைப் போல ஆனதை நினைத்து..கொண்டு.டேய் ! பஞ்சு உனக்கு மட்டும் ஏன்டா இப்படி!
ஹல்லோ பஞ்சுங்கறது நாம எல்லோரும்தான். வினோத் மட்டும் இல்லை...

அன்புடன்
வினோதமானவன்.



Thursday, December 17, 2009

இது என்னுனடைய நண்பர் ஒருவர் மின்னஞ்சலில் அனுப்பியது. வயிற்று வலி மாத்திரையை தயாராக எடுத்து வைத்து கொள்ளவும்.

அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?"

நியாயமான ஒரு கேள்வி


"ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம்
வாங்கிட்டு, பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே? அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?" –



நியாயமான ஒரு கேள்வியை கேட்டார் எனது அப்பா.

நானும் விவரிக்க ஆரம்பிதேன்.


"வெள்ளைகாரனுக்கு எல்லா வேலையும் சீக்கிரமா முடியணும்.
அதே மாதிரி எல்லா வேலையும் அவனோட வீட்டுல இருந்தே செய்யணும்.
இதுக்காக எவ்வளவு பணம் வேணுமானாலும் செலவு செய்ய தயாரா இருக்கான்."


"அது சரி பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்".

"இந்த மாதிரி அமெரிக்கால்-ல, இங்கிலாந்து-ல இருக்குற Bank,
இல்ல எதாவது கம்பெனி, "நான் செலவு செய்ய தயாரா இருக்கேன். எனக்கு இத செய்து கொடுங்கனு கேப்பாங்க.
இவங்கள நாங்க "Client"னு சொல்லுவோம்.


"சரி"


இந்த மாதிரி Client-அ மோப்பம் பிடிக்குறதுக்காகவே எங்க பங்காளிக கொஞ்ச பேர அந்த அந்த ஊருல உக்கார வச்சி இருப்போம். இவங்க பேரு "Sales Consultants, Pre-Sales Consultants. ...".


இவங்க போய் Client கிட்ட பேச்சுவார்த்தை நடத்துவாங்க.



காசு கொடுகுறவன் சும்மாவா கொடுப்பான்?

ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பான். உங்களால இத பண்ண முடியுமா?
அத பண்ண முடியுமான்னு அவங்க கேக்குற எல்லாம் கேள்விக்கும், "முடியும்"னு பதில் சொல்றது இவங்க வேலை.


"இவங்க எல்லாம் என்னப்பா படிச்சுருபாங்க"?


"MBA, MS-னு பெரிய பெரிய படிபெல்லாம் படிச்சி இருப்பாங்க."


"முடியும்னு ஒரே வார்த்தைய திரும்ப திரும்ப சொல்றதுக்கு எதுக்கு MBA படிக்கணும்?"

அப்பாவின் கேள்வியில் நியாயம் இருந்தது.


"சரி இவங்க போய் பேசின உடனே client project கொடுத்துடுவானா?"


"அது எப்படி? இந்த மாதிரி பங்காளிக எல்லா கம்பெனிளையும் இருப்பாங்க. 500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 60 நாள்ள
முடிச்சு தரோம், 50 நாள்ல முடிச்சு தரோம்னு பேரம் பேசுவாங்க. இதுல யாரு குறைஞ்ச நாள சொல்றாங்களோ அவங்களுக்கு ப்ராஜெக்ட் கிடைக்கும்"



"500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 50
நாள்ல எப்படி முடிக்க முடியும்? ராத்திரி பகலா வேலை பார்த்தாலும் முடிக்க முடியாதே?"


"இங்க தான் நம்ம புத்திசாலித்தனத்த நீங்க
புரிஞ்சிக்கணும். 50 நாள்னு சொன்ன உடனே client சரின்னு சொல்லிடுவான்.


ஆனா அந்த 50 நாள்ல அவனுக்கு என்ன வேணும்னு அவனுக்கும் தெரியாது, என்ன செய்யனும்னு நமக்கும் தெரியாது.
இருந்தாலும் 50 நாள் முடிஞ்ச பிறகு ப்ரோஜெக்ட்னு ஒண்ண நாங்க deliver பண்ணுவோம். அத பாத்துட்டு "ஐயோ நாங்க கேட்டது இதுல்ல, எங்களுக்கு இது வேணும், அது வேணும்னு" புலம்ப ஆரம்பிப்பான்.



"அப்புறம்?" - அப்பா ஆர்வமானார்.

"இப்போ தான் நாங்க நம்பியார் மாதிரி கைய பிசஞ்சிகிட்டே "இதுக்கு நாங்க CR raise பண்ணுவோம்"னு சொல்லுவோம்.


"CR-னா?"


"Change Request. இது வரைக்கும் நீ கொடுத்த பணத்துக்கு நாங்க வேலை பார்த்துட்டோம்.
இனிமேல் எதாவது பண்ணனும்னா எக்ஸ்ட்ரா பணம் கொடுக்கணும்"னு
சொல்லுவோம். இப்படியே 50 நாள் வேலைய 500 நாள் ஆக்கிடுவோம்."



அப்பாவின் முகத்தில் லேசான பயம் தெரிந்தது.

"இதுக்கு அவன் ஒத்துபானா?"


"ஒத்துகிட்டு தான் ஆகணும்.


முடி வெட்ட போய்ட்டு, பாதி வெட்டிட்டு வர முடியுமா?"


"சரி ப்ராஜெக்ட் உங்க கைல வந்த உடனே என்ன பண்ணுவீங்க?"



"முதல்ல ஒரு டீம் உருவாக்குவோம்.
இதுல ப்ராஜக்ட் மேனேஜர்னு ஒருத்தர் இருப்பாரு. இவரது தான் பெரிய தலை.
ப்ராஜெக்ட் சக்சஸ் ஆனாலும், ஃபெயிலியர் ஆனாலும் இவரு தான் பொறுப்பு."


"அப்போ இவருக்கு நீங்க எல்லாரும் பண்ற வேலை எல்லாம் தெரியும்னு சொல்லு."


"அதான் கிடையாது.

இவருக்கு நாங்க பண்ற எதுவுமே தெரியாது."


"அப்போ இவருக்கு என்னதான் வேலை?" –

அப்பா குழம்பினார்.


"நாங்க என்ன தப்பு பண்ணினாலும் இவர பார்த்து கைய நீட்டுவோம். எப்போ எவன் குழி பறிப்பான்னு டென்ஷன் ஆகி டயர்ட் ஆகி டென்ஷன் ஆகுறதுதான் இவரு வேலை."


"பாவம்பா"

"ஆனா இவரு ரொம்ப நல்லவரு.
எங்களுக்கு எந்த பிரச்னை வந்தாலும் இவரு கிட்ட போய் சொல்லலாம்."


"எல்லா பிரச்னையும் தீர்த்து வச்சிடுவார?"


"ஒரு பிரச்சனைய கூட தீர்க்க மாட்டாரு.
நாங்க என்ன சொன்னாலும் தலையாட்டிகிட்டே உன்னோட பிரச்னை
எனக்கு புரியுதுனு சொல்றது மட்டும் தான் இவரோட வேலை."


"நான் உன்னோட அம்மா கிட்ட பண்ற மாதிரி?!"

"இவருக்கு கீழ டெக் லீட், மோடுல் லீட், டெவலப்பர், டெஸ்டர்னு நிறைய அடி பொடிங்க இருப்பாங்க."


"இத்தனை பேரு இருந்து, எல்லாரும் ஒழுங்கா வேலை செஞ்சா வேலை ஈஸியா முடிஞ்சிடுமே?"


"வேலை செஞ்சா தானே? நான் கடைசியா சொன்னேன் பாருங்க... டெவலப்பர், டெஸ்டர்னு, அவங்க மட்டும் தான் எல்லா வேலையும் செய்வாங்க. அதுலையும் இந்த டெவலப்பர் வேலைக்கு சேரும் போதே "இந்த குடும்பத்தோட மானம், மரியாதை உன்கிட்ட தான் இருக்குனு" சொல்லி, நெத்தில திருநீறு பூசி அனுப்பி வச்ச என்னைய மாதிரி தமிழ் பசங்க தான் அதிகம் இருப்பாங்க."


"அந்த டெஸ்டர்னு எதோ சொன்னியே?
அவங்களுக்கு என்னப்பா வேலை?"


"இந்த டெவலப்பர் பண்ற வேலைல குறை கண்டு பிடிக்கறது இவனோட வேலை.

புடிக்காத மருமக கை பட்டா குத்தம்,
கால் பட்டா குத்தம்கறது மாதிரி."


"ஒருத்தன் பண்ற வேலைல குறை கண்டு பிடிகுறதுக்கு சம்பளமா? புதுசா தான் இருக்கு. சரி இவங்களாவது வேலை செய்யுராங்களா. சொன்ன தேதிக்கு வேலைய முடிச்சு கொடுத்துடுவீங்கள்ள?"


"அது எப்படி..? சொன்ன தேதிக்கு ப்ராஜக்டை முடிச்சி கொடுத்தா, அந்தக் குற்ற உணர்ச்சி எங்க வாழ்கை முழுவதும் உறுத்திக்கிட்டு
இருக்கும். நிறைய பேரு அந்த அவமானத்துக்கு பதிலா தற்கொலை
செய்துக்கலாம்னு சொல்லுவாங்க"


"கிளையன்ட் சும்மாவா விடுவான்? ஏன் லேட்னு கேள்வி கேக்க மாட்டான்?"


"கேக்கத்தான் செய்வான். இது வரைக்கும் டிமுக்குள்ளையே காலை வாரி விட்டுக்கிட்டு இருந்த நாங்க எல்லாரும் சேர்ந்து அவன் காலை வார ஆரம்பிப்போம்."


"எப்படி?"

"நீ கொடுத்த கம்ப்யூட்டர்-ல ஒரே தூசியா இருந்துச்சு. அன்னைக்கு டீம் மீட்டிங்ல வச்சி நீ இருமின, உன்னோட ஹேர் ஸ்டைல் எனக்கு புடிகலை." இப்படி எதாவது சொல்லி அவன குழப்புவோம்.

அவனும் சரி சனியன எடுத்து தோள்ல போட்டாச்சு, இன்னும் கொஞ்ச நாள் தூங்கிட்டு போகட்டும்னு விட்டுருவான்".


"சரி முன்ன பின்ன ஆனாலும் முடிச்சி கொடுத்துட்டு கைய கழுவிட்டு வந்துடுவீங்க அப்படித்தான?"


"அப்படி பண்ணினா, நம்ம நாட்டுல பாதி பேரு வேலை இல்லாம தான் இருக்கணும்."


"அப்புறம்?"


"ப்ராஜக்டை முடிய போற சமயத்துல நாங்க எதோ பயங்கரமான ஒண்ண பண்ணி இருக்குறமாதிரியும், அவனால அத புரிஞ்சிக்க கூட முடியாதுங்கற மாதிரியும் நடிக்க ஆரம்பிப்போம்."


"அப்புறம்?"

"அவனே பயந்து போய்,
"எங்கள தனியா விட்டுடாதீங்க. உங்க டீம்-ல ஒரு ஒண்ணு, ரெண்டு பேர உங்க ப்ரொஜெக்ட பார்த்துக்க சொல்லுங்கன்னு"

புது பொண்ணு மாதிரி புலம்ப ஆரம்பிச்சிடுவாங்க."

இதுக்கு பேரு "Maintenance and Support".
இந்த வேலை வருஷ கணக்கா போகும்.


"ப்ராஜக்ட் அப்படிங்கறது ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு வர்றது மாதிரி.

தாலி கட்டினா மட்டும் போதாது, வருஷ கணக்கா நிறைய செலவு செஞ்சு பராமரிக்க வேண்டிய விசயம்னு" இப்போ தான் கிளைன்டுக்கு புரிய ஆரம்பிக்கும்.

"எனக்கும் எல்லாம் புரிஞ்சிடுப்பா."