Friday, August 7, 2009

நம் சராசரியின் குடும்பம் (சரணாலயம்)


நம் சராசரியின் குடும்பம் வித்யாசமானது தெரியுமோ! நம் சராசரி வீட்டிற்கு நடுப்பிள்ளையாகவோ அல்லது கடைசிப்பிள்ளையாகவோ தான் இருப்பார்.
ஆத்துக்கு செல்லப்பிள்ளைன்னு ஏமாத்தி எல்லா வேலையும் நம் சராசரியின் தலையில் தான் விடியும்.

டேய் கண்ணா சமத்தோன்னோ! போய் பால் வாங்கிண்டு வாடா. இது அம்மா.
டேய் ஸ்க்குல்லெர்ந்து வரப்ப நம்ம விநாயகா cycle கடையில நம்மாத்து cyclela puncture ஒட்ட கொடுத்திருக்கேன். வரப்ப வாங்கிண்டு வந்துடு. தள்ளிண்டு வா! ஒட்டாதே. அப்புறம் எங்கேயாவது விழுந்து வச்சேன்னா மறுபடியும் தண்டம் அழனும். இது அண்ணா.

டேய் கண்ணா! என் செல்லம் இல்ல. please போய் hair pin வாங்கிண்டு வாடா! இது அக்கா! இப்படி எல்லா வேலையையும் வாங்கிண்டு யாரவது relatives வரப்ப இவன் தான் எங்காத்து கடைக்குட்டி, ஆனா கொஞ்சம் முசுடுன்னு ஒரு முத்திரை குத்திடுவா.

இதுல என்ன விசேஷம்னா கடைசில நம்ம சராசரியா அசடா அடிக்கறது தான். மாமி, உங்காத்து vaccum cleaner கொஞ்சம் தரேளா? ன்னு எதிர்த்தாத்து பங்கஜம் மாமி கேப்பா. உடனே நம்ம சராசரியின் அம்மா ஒ! அது work ஆகலை போலிருக்கே. இன்னும் ஒக்க பண்ணலையே!(not working or have not repaired). இப்போ நம்ம சராசரி ரொம்ப அப்பாவியா உலகம் புரியாம இன்னிக்கு போட்டேனே! work ஆச்சே!ன்னு சொல்ல, அம்மா ரொம்ப அப்பாவியா மூஞ்சிய வச்சுண்டு (சிவாஜி இல்ல hollywood actor marlon brando கூட தோத்துடுவான்) ஒ! உங்கப்பா சரி பண்ணிட்டாளா?எங்கிட்ட சொல்லவே இல்லையே. தேவையில்லாம வாருக்கட்டைய வச்சு பெருக்கினேனே. அப்படின்னு அசடு வழிய சொல்ல, எதிர்த்தாத்து மாமி சின்ன நக்கல் சிரிப்போட நம்ம சராசரியா பார்த்து சமத்துடான்னு வேற சொல்லுவா. அம்மா vaccum cleanera கொடுத்துட்டு சராசரிய ஒரு போடு போட்டு(மனசுக்குள்ள சமத்தாம் சமத்து சுத்த அசத்து அப்பன மாதிரியே பொறந்திருக்கு உதாவாக்கரை ) கடன்காரா நேக்கு தெரியாதா?

இப்ப அந்த்தாத்து வானரங்கள் நம்ம cleanara ரெண்டாத்தான் கொடுக்கபோரதுன்னு சொல்லிண்டே முதுகுல ஓங்கி ஒரு போடு போட்டு பெரியவா பேசறப்ப வந்தேன்னா இருக்கு சேதின்னு வேற திட்டுவா. நம்ம சராசரி கடைசியில் இ தி கு (இஞ்சி தின்ன குரங்காட்டம்) மூஞ்சிய வச்சுண்டே பரிதாபமா போவார். அவர் குழந்தையா இருந்ததிலேர்ந்து அவருக்கு குழந்தை பிறக்கிற மட்டும் அசடாகவே அடிக்கப்பட்ட நம்ம சராசரி பாவம் தான் இல்லையா!

இப்படி எழுதறேன்னே நான் சராசரியா? haiyoo haiyoo! சராசரியாம்ள! avvvvvvvvvvv..........
அன்புடன்
விநோதமனவன்.

2 comments:

  1. senthu....
    your experience is choo sweet..
    anyhow i became ur fan..
    eager to read ur next blog,,

    really u r a vinothamanavan..

    ReplyDelete